Wednesday, September 11, 2013

அம்மா.., 

இப்போது உங்களது பொன்னான ஆட்சி 
சிறப்பாக நடந்து வருவது உலகறிந்ததே.. 
உங்கள் ஆட்சியின் ஒரு வருட சாதனைகளை 
போன் போட்டு பலருக்கு தெரிவித்து, அவர்களை 
நல்வழிக்கு ( நம்ம கட்சிக்கு தான் ) கொண்டு 
வருவதை என் கடமையாக கருதி செய்து வருகிறேன். 

அந்த பணியில் எனக்கு இப்போது சிறு தடங்கல் 
ஏற்பட்டு உள்ளது..

உங்கள் சாதனைகளை பாதி சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே மொபைல் போனில் பேட்டரி
சார்ஜ் காலி ஆகிவிடுகிறது..

ஆகையால் தினமும் மொபைல் போன் சார்ஜ்
செய்யுமளவுக்காவது கரண்ட் கொடுக்கும்படி
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு
அம்மாவின் கொத்தடிமை.

No comments:

Post a Comment