Sunday, January 4, 2015


நைட்டு 8 மணிக்கு மங்குவோட போன்..
" ஹலோ.. வெங்கி... "
" சொல்லு மங்கு.... "
" இன்னிக்கு ஆபீஸ்ல திட்டிட்டாங்கப்பா...!! "
" நீ என்ன பண்ணே..?!! "
" ஒன்னுமில்ல மச்சி.. டியூட்டி டைம்ல
லைட்டா தண்ணி அடிச்சேன்.. இது
ஒரு தப்பா..? "
" இல்லியா பின்னே..?!! "
" அப்ப ஏன் மச்சி கவர்மெண்ட்
காலைல 10 மணிக்கே கடையை
ஓபன் பண்ணி வெக்குது..?!! "
" குட் கொஸ்டின்... இருந்தாலும்
நீ பண்ணினது தப்புதேன்... "
" அப்படின்ற..? "
" ஆமா.. நான் சொன்னா நீ கேப்பியா..?
மாட்டியா..? "
" என்னா மச்சி இப்படி கேட்டுட்டே..
நீ சொன்னா நான் மாடில இருந்து கூட
குதிப்பேன்.. "
( டேய்.. போதும்டா...!!! )
" அப்படின்னா.. இனிமே வேலை நேரத்துல
தண்ணியடிக் கூடாது..!! "
" ஓ.கே.. நாளைக்கே விட்டுடுடறேன்.. "
" தண்ணியவா...?!! "
" ஹி., ஹி., ஹி... வேலையை..!!! "
" த்த்தூ..!!! "

No comments:

Post a Comment