Wednesday, January 14, 2015


நேத்து நம்ம ரேவ்ஸ் குமார் மேடம்
சாட்டிங்ல...
" வர்ற சென்னை புத்தகக் கண்காட்சில
என் புக் வெளியிடப்போறாங்க.. "
" நான் வந்து தலைமை தாங்கணுமா..?
நீங்க முன்னமே சொல்லி இருக்கலாம்ல..
நான் வேற எஸ்.ரா-வுக்கு.. "
" ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் சொல்றதை
கேக்கறீங்களா..?!! "
" சரி.. சொல்லுங்க.. "
" எங்கே எனது கவிதை..?!! "
" ஐயோ.. சத்தியமா நான் பார்க்கலைங்க..
அங்கே தான் எங்கயாவது இருக்கும்
நல்லா தேடி பாருங்க. "
" அட.. அது என் புக் தலைப்புங்க.. "
" ஓ.. கவிதை புக்கா... "
" இல்லங்க.. கதை புக்கு..!! "
( குழப்பறாய்ங்களே...!!! )
" நீங்க ஒருதரம் படிச்சிட்டு நல்லா
இருக்கானு சொல்லுங்க..!! "
" சொன்னா... என்ன தருவீங்க..?! "
" என்ன வேணும்..?!! "
" அடுத்த நாவல்ல ஹீரோவுக்கு வெங்கட்னு
பேர் வெக்கணும்.. டீலா..?!! "
" ஐயோ.. நான் மாட்டேன்பா... என் ஹீரோஸ்
எல்லாம் ரொம்ப நல்லவங்க... "
" என்னாது... நல்லவிங்களா..?!! அவ்வ்வ்..!!! "
டிஸ்கி :
டியர் ப்ரெண்ட்ஸ்..,
நம்ம ரேவ்ஸ் குமார் நாவல்கள் சூப்பரா
இருக்கும்..
இந்த சென்னை புத்தக கண்காட்சில
நம்ம நண்பர்கள் எல்லோரும் ரேவ்ஸ் மேடம்
புக்கை வாங்கி ( அப்படியே எனக்கு ஒன்னு
பார்சேல்ல்ல்.. ) இந்த வருஷம் டாப் சேல்ஸ்
ஆனது ரேவ்ஸ் குமார் புக் தான்னு பேர் வர
வெக்கணும்..
செய்வீர்களா..?!! நீங்கள் செய்வீர்களா..?!!
கிடைக்கும் இடம் :
ஸ்டால் - மூவர் நிலையம்
ஸ்டால் எண் - 478 & 479.
வழி - மகேந்திர பல்லவன் வீதி.

No comments:

Post a Comment