Thursday, February 19, 2015


காலேஜ்ல எனக்கு கண்மணினு
ஒரு ப்ரெண்டு
பேச்சுப்போட்டி, கவிதைபோட்டினு
எது நடந்தாலும் நாங்க ரெண்டு பேரும் 
கலந்துக்குவோம்..
( பரிசு என்னமோ அவங்களுக்கு தான்
கெடைக்கும்.. அது வேற விஷயம்..!!
ஹி., ஹி., )
ஒரு நாள் கண்மணி ஒரு டைரி
வெச்சிருந்தாப்ல... எடுத்து படிச்சா...
டைரி முழுக்க... கவிதை..!!!
அட நம்ம கூட இருக்குற புள்ளக்கு
இவ்ளோ தெறமையான்னு புல்லரிச்சு
போச்சு...
" கண்மணி... இதை நீயா எழுதினே..? "
" ஆமாம்.. எதுக்கு கேக்கற..? "
" வாவ் சூப்பர்... சூப்பர்... வைரமுத்து மாதிரியே
எழுதறியே... "
" ஏய்.. நெசமா சொல்லு... நீ வைரமுத்து கவிதை
படிச்சி இருக்கே...?!! "
" என்ன இப்படி கேட்டுட்டே.. ஒரு புக் விடாம
படிச்சி இருக்கேன்.. ஆமா ஏன் அப்படி டவுட்டா
கேக்கறே..? "
" ஏன்னா.. இதெல்லாமே அவரோட கவிதை
தான்..!!! அதான் கேட்டேன்... "
டொய்ங்....
# ஓவரா ஃபிலிம் காட்டிட்டோமோ..?!!

No comments:

Post a Comment