Tuesday, March 10, 2015


நேத்து என் ப்ரெண்ட் லேகா போன்
பண்ணியிருந்தாங்க... அப்ப...
" வெங்கட்.. , என் ப்ரெண்ட் உங்க கூட
பேசணும்னு சொல்றா.. இன்ட்ரோ பண்ணி வெக்கட்டுமா..? "
" வேண்டாங்க.. அப்புறம் ஃபீல் பன்ணுவீங்க..!! "
" எதுக்கு..? "
" நான் உங்களை பத்தி எதுனா தப்பு தப்பா
சொல்லிட்டா.. உங்க ப்ரெண்ஷிப் கெட்டுடும்..!! "
" சே.., சே.. என் ப்ரெண்ட் அதெல்லாம்
நம்ப மாட்டா... "
" வேணாங்க... சொன்னா கேளுங்க.. "
" நீங்க வேணா என்னை பத்தி சொல்லி
பாருங்க.. சே., சே., லேகா அப்படி இல்லைனு
தான் சொல்லுவா....!! "
" சரி போனை ஸ்பீக்கர்ல போட்டு குடுங்க..!! "
" ஹாய்.. மீ வெங்கட்.. "
" ஹாய்... நான் லேகா ப்ரெண்ட் ஆனந்தி..!! "
" இந்த லேகா பொண்ணு ரொம்ப வாய்ங்க..! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
( ஓ.. டிரைனிங்கா..?!!! )
" லேகா ரொம்ப புத்திசாலிங்க....! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
" லேகா ரொம்ப அமைதிங்க....! "
" சே., சே., லேகா அப்படி இல்லைங்க..!! "
" ஏய்.. என்னடி அவரு புத்திசாலி, அமைதினு
சொல்றாரு.. நீ இல்லன்னு சொல்றே..?!! "
( டிஷ்ஷூம்.. டிஷ்ஷூம்..!!! )
ஹா., ஹா., ஹா...!!!
நான் தான் அப்பவே சொன்னேன்ல..!!
( நாராயணா.. நாராயணா..!! )

No comments:

Post a Comment