Sunday, April 19, 2015

ஜனா - அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து...

என் ப்ரெண்ட் Janarthanan Kasiviswanathan
அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து...
-----------------------------------------------------------------------------
என் இனிய வெங்கட்,
May 5,1994 நியாபகம் இருக்கிறதா?
அன்றுதான் நம் முதல் சந்திப்பு..
21 வருடம் ஆகிறது நம் நட்புக்கு.
எவ்வளவோ சந்தோச கணங்கள்,சண்டைகள், திட்டுக்கள்,மனஸ்தாபங்கள் அத்தனையும் தாண்டி
இன்னும் இம்மியளவும் குறையாத பாசத்தோடு
என்னோடு நட்பு பாராட்டுவதற்கு நெஞ்சார்ந்த நன்றி.
படிப்பு முடிந்து
கடமை உணர்ந்து
குடும்ப பொறுப்பும் வளர்ந்து
ஆளுக்கொரு திசையில்
எதிர்காலம் நோக்கி பயணம் செய்யும்போதும்
ஏப்ரல் வந்தவுடன்....
இளம்பிள்ளை திருவிழாவும்...,
கறிக்கோழி பிரியாணியும்,
உன் மாமன் மகள் (நிர்மலா வெங்கட்)காதல் கதையும்,
உன்னுடைய பிறந்த நாளும்,
எப்போதும் பசுமையாய் என் நெஞ்சில்
" அது ஒரு அழகிய நிலாக்காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்"
இணையம் வளர நீ வளர்ந்தாயா
இல்லை நீ வளர இணையம் வளர்ந்ததா
சரியாக கணிக்க இயலா புதிர்...
நீ இரவில் கூட ஒளிரும் கதிர்...!
SUN TV க்கு முன்னமே
"நீங்கள் கேட்ட பாடல்" நிகழ்ச்சியை நடத்தியவன்
ஊர் மக்கள் சிந்தனையில் புது ரத்தம் செலுத்தியவன்...!
கறந்த பால் மடிபுகாது
உடைந்த கண்ணாடி ஒட்டாது
உன் நகைச்சுவை யாருக்கும் கிட்டாது...!
பொறுப்பான அண்ணன்.,
அன்பான கணவன்.,
சிறப்பான தகப்பன்.,
என பல அவதாரம் கொண்டவண்டா
நீ எப்போதும் எனக்கு "நண்பேண்டா"
ஏப்ரல்14
தமிழுக்கு பிறந்த நாள்
நீ பிறந்ததால் தமிழுக்கே
இது சிறந்த நாள்...!
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ வாழ்த்தும் ஜனா...!

No comments:

Post a Comment