Sunday, April 19, 2015


இன்னிக்கு என் Wife கொஞ்சம் கோவமா
கேட்டாங்க..
" சுஹாசினியை கலாய்ச்சி எல்லாம்
எதுக்கு போஸ்ட் போடறீங்க..?! "
" அவங்க மட்டும் எங்களை சீண்டலாமா..?! "
" உங்களையா..?!! "
" எங்களைன்னா... இணைய போராளிகளை..,
மீ ஆல்சோ எ இணைய போராளி யூ நோ..?! "
" ம்ம்க்கும்...!! "
" சரி.. உனக்கு பிடிச்ச மணிரத்னம் படம்
எல்லாம் சொல்லு...!! "
" மௌன ராகம்., தளபதி, நாயகன்..,
அலைபாயுதே... "
" ஸ்டாப்.. ஸ்டாப்.. ' அலைபாயுதே '-க்கு
அப்புறம் சொல்லு..!! "
" அலைபாயுதேக்கு அப்புறமா.. அது...
அது... அதுக்கு அப்புறம் எனக்கு எதுவும்
புடிக்கலையே...!! "
" இத.. இத.. இதத்தானேம்மா... நாங்களும்
சொல்றோம்..!! "
# ஓ.கே கண்மணி..?!!

No comments:

Post a Comment