Tuesday, July 21, 2015

எங்க அண்ணன் பையன் கிஷோர்
காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறான்...
போன வாரம் அவன் கூட படிக்கறவங்க
வீட்டுக்கு வர போறாங்கனு சொல்லிட்டு 
இருந்தான்.....
" டேய் கிஷோரு.. ஒரு முக்கியமான விஷயம்
சொல்றேன்.. நல்லா நோட் பண்ணிக்க.... "
" என்ன சித்தப்பு..? "
" உன் ப்ரெண்ட்ஸ் யாராவது என்னைய
யார்னு கேட்டா.. சித்தப்பானு சொல்லக்கூடாது...."
" பின்ன..? "
" பிரதர்னு சொல்லு..!! "
" ஏன் சித்தப்பு இந்த வெளம்பரம்...?!! "
" நான் சொல்றதை மட்டும் கேளு...
குறுக்க கேள்வி கேக்காதே...!! "
" சரி சொல்லித் தொலைக்கிறேன்..!! "
( ரொம்பத்தான் சலிச்சிக்கறானே..!!! )
" டேய்.. அப்புறம்... Younger Brother-ஆ.. இல்ல
Elder Brother-னு கேட்டா என்ன சொல்லுவே..?!! "
( இப்ப அவன் கண்ணுல ஒரு கொலவெறி
தெரிஞ்சது... )
" ஆங்... நீங்க இன்னும் பொறக்கவே இல்லனு
சொல்லிடறேன்.. போதுமா..?!! "
# அடப்பாவி.. ரொம்ப கோவக்காரனா இருப்பான்
போலயே..!!

No comments:

Post a Comment