Monday, July 27, 2015


நம்ம Erode Kathir சார் புக்கு வந்திருச்சு..
வாழ்த்துக்கள் கதிர் சார்..
எப்பல்லாம் பதிவர்கள் புக் ரிலீஸ் ஆகுதோ.. 
அப்பல்லாம் எனக்கு பல்ப் எரியும்..
( " நம்ம புக் எப்ப இது மாதிரி ரிலீஸ் ஆகறது..?!! " )
டக்னு எனக்கு ஞாபகம் வந்தது...
" நம்ம சிஷ்ய பையன் Siva Sankar
பதிப்பகம் வெச்சி இருக்கான்ல... "
அட.. சிக்கனை கையில வெச்சிட்டு
சிக்கன் பிரியாணிக்கு அலைஞ்சி இகுக்கோமே..!?
வெட்டிடுவோம்...!!!
உடனே என் சிஷ்ய பையனுக்கு போனை
போட்டேன்..
" சிவா... எனக்கு ஒரு ஐடியா.. "
" என்ன தல... "
" என் பதிவை எல்லாம் உங்க பதிப்பகம் மூலமா
புக்கா போடலாம்னு இருக்கேன்.. "
( ஒரு செகண்ட் ஜெர்க் ஆகிட்டான்...
இன்ப அதிர்ச்சியா இருக்கும்..!! )
" தல... நாங்க சின்ன பதிப்பகம்.. "
"அதனால என்ன...?!! "
" உயிர்மை " மாதிரி பெரிய பதிப்பகத்துல
ஜாயின் பண்ணி விடவா..?! "
" நோ... நான் உங்களுக்கு தான்
வாழ்க்கை குடுக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்.. "
" ஆணியே பிடுங்க வேணாம்...!!! "
போனை வெச்சிட்டான்...
# ஆஹா... பிரியாணி போச்சே..!!!

No comments:

Post a Comment