Saturday, September 19, 2015

நைட் 7 மணி..
எங்க ஊர் பள்ளிவாசல்ல தாயத்து
கட்டுவாங்க..
ஒரு தாயத்து வாங்கணும்னு போயி
இருந்தேன்..
கொஞ்சம் கூட்டமா இருந்தது.. சரினு
போயி க்யூல நின்னுட்டேன்..
கொஞ்ச நேரத்துல என் ப்ரெண்ட் ரமேஷ்கிட்ட
இருந்து போன்..
" என்னடா.. எங்க ஏரியாவுக்கு வந்து இருக்கே..? "
" தாயத்து வாங்கலாம்னு.. ஆமா.. நீ எங்கடா
இருக்கே..?! "
" இங்கே பார்.. அங்கே பார்னு " சொன்னான்...
நானும் சுத்தி சுத்தி பாத்தேன்... எங்கேனு தெரியல...
" மச்சி.. எங்கே இருக்கேனு தெரியலடா.."
" கண்ணு டொக்கு ஆகிடுச்சா..?! "
" சே.. சே.. இருட்டா இருக்குல்ல.. அதான்.. "
" அதே இருட்டு தானே எனக்கும்.. நான்
உன்னை பார்க்கறேன்ல... "
" அது வேற ஒண்ணுமில்ல மச்சி..
என் தலைக்கு பின்னாடி ஒளிவட்டம்
தெரியுதுல்ல.. அதான் நீ ஈஸியா கண்டுபிடிச்சிட்டே... "
" டமால்...!! "
( போனை போட்டு உடைச்சிட்டான் போல... 
ஹி., ஹி., ஹி..!! )

No comments:

Post a Comment