Saturday, September 19, 2015

நேத்து வினாயகர் சதுர்த்தி லீவ்..
என் சின்னப்பையன் கோகுல் ( 3rd Std )
காலைல இருந்து புக் எடுத்து வெச்சி
படிக்கவேயில்ல..
அடுத்த நாள் எக்ஸாம் வேற இருக்கு...
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது...
நைட் 9 மணி...
" டேய் கண்ணா.. வாடா கொஞ்சமாச்சும்
படிக்கலாம் "
" சாமி ஊர்வலம் வருதுப்பா.. பாத்துட்டு
வரேன்..! "
" இன்னும் நீ படிக்கவே இல்லடா... நாளைக்கு
எக்ஸாம்ல என்னடா பண்ணுவே..!! "
" எக்ஸாம்ல ஜீரோ மார்க் எடுப்பேன்..
கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்...
ஹேப்பியா இருப்பேன்..! "
ஆங்...!!! கல்யாணம் பண்ணிக்கலன்னா..
ஹேப்பியா இருக்கலாம்னு இவனுக்கு யாரு
சொல்லி இருப்பானு யோசிச்சிட்டே...
பின்னால திரும்பினேனா...
" ஐயோ.. நிர்மலா.. நான் ஒன்னும் சொல்லல..
அவனே... "
# கதம் கதம்..!!!

No comments:

Post a Comment