Monday, December 21, 2015

தினேஷ் ரொம்ப டென்ஷனா இருந்தான்...
" வெங்கி... மத்தியானத்துல இருந்து
எங்க பக்கத்துவீட்டு பொண்ணை காணோம்டா..! "
" என்ன படிக்குது..? "
" காலேஜ் செகண்ட் இயர்..! "
" ஓரு நிமிஷம் வெயிட் பண்ணு "-னு
சொல்லிட்டு போனை போட்டேன்...
" எங்கடா இருக்கே..?!! "
" _____________ "
" ஓ.. அப்படியா... ஒரு சின்ன மேட்டரு...
சரி நான் அப்புறமா பேசறேன்...!! "
போனை கட் பண்ணிட்டு...
" தினேஷு.. இந்நேரம் அந்த பொண்ணு வந்திருக்கும்..
நீ வேணா போன் பண்ணி கேட்டுப்பாரு..!! "
அவனும் போனை பண்ணினான்.. பொண்ணும்
வந்துடுச்சினு சொன்னாங்க..
தினேஷ்க்கு ஆச்சரியம் தாங்கல...
" எப்படிடா கரெட்டா சொன்னே..? யாருக்குடா
போனை போட்டே..?! "
" எல்லாம் நம்ம மங்குனிக்கு தான்...!! "
" மங்குனிக்கா..? அவனுக்கு எதுக்குடா..?! "
" ஊருக்குள்ள பொண்ணு காணோம்னா.. இவன்
எதாவது இழுத்துட்டு ஓடியிருந்தாதான் உண்டு..
இந்த பன்னாடையே வீட்லதான் இருக்கேனு சொல்லிச்சு..
அத வெச்சி தான் அந்த பொண்ணு ஓடியிருக்க
சான்ஸ் இல்ல... வந்துடும்னு சொன்னேன்..!! "
" அடப்பாவிகளா..!! "

No comments:

Post a Comment