Sunday, January 24, 2016

ஏன்..? ஏன்..? ஏன்..?



1. Tv-ல வர்ற சமையல் நிகழ்ச்சி ஒண்ணு
விடாம பாத்து.., Notes எடுக்கறீங்க..
ஆனா ஏன் எப்பவும் அதே உப்புமாவை
செஞ்சி படுத்தறீங்க..?!
2. "எங்கம்மா ரசம் வெச்சா அப்டி இருக்கும்"னு
நினைச்சு நினைச்சு பூரிக்கறீங்க..
ஆனா நாங்க "என் அம்மா செஞ்ச பிரியாணி
சூப்பரா இருக்கு"னு சொல்லிட்டா போச்சு...
டின்னருக்கு மறுபடியும் உப்புமா செஞ்சி வெச்சிடறீங்க...
3. உங்க பீரோ ஃபுல் ஆகிடுச்சே.. சேலை வெக்க
இடம் இல்லாம கஷ்டப்படறீங்களேனு பரிதாபப்பட்டு...
எங்க பீரோல ஒரு ரேக் விட்டு கொடுக்கறோம்.....
ஆனா.. பீரோவ பூட்டி சாவியை நீங்க எடுத்துட்டு
போயிடறீங்க...
4. EB பில் கட்டிடுனு சொன்னா.. மறந்துடறீங்க..
ஆனா 4 வருஷத்துக்கு முன்னால தம்பி
கல்யாணத்துக்கு உங்க தங்கச்சியோட
சின்ன மாமியாரோட ரெண்டாவது மருமக
என்ன கலர்ல சேலை கட்டிட்டு வந்தானு
கரெக்ட்டா ஞாபகம் வெச்சிட்டு இருக்கீங்க..
5. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச புடலங்காய்
பொரியல்.. எங்களுக்கு பிடிக்கலன்னு சொன்னா...
"நல்லதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதானு..?! "
திட்றது...
ஆனா எங்களுக்கு பிடிச்ச பப்பாளிபழத்தை
சாப்பிடும் போது.. வேணும்னே முன்னாடி வந்து..
இந்த கருமத்தை எப்படித்தான் சாப்பிடறீங்களோ..?
"உவ்வ்வே"னு வாந்தி எடுக்கறது...!
இதெல்லாம் ரொம்ப ஓவரு... ஆமா..!!
# தூம் ததா..!!!!

No comments:

Post a Comment