Friday, February 26, 2016


இன்னிக்கு என் Wife-கிட்ட சொல்லிட்டு
இருந்தேன்..
" எனக்கு இருக்குற சங்கீத தெறமைக்கு
நான் ஆஹா.. ஓஹோன்னு வந்திருக்க 
வேண்டியவன்.. "
" ஆஹான்...?!! "
" அட நம்புங்கறேன்.. சின்ன வயசுல
சங்கீதம்னா எனக்கு உசுரு..!! "
" அப்புறம்..?!! "
" பாட்டு கத்துக்கறதால ஓவரா பணம்
செலவாகுதுன்னு எங்கப்பா தான்
பாட்டு கிளாஸ் கட் பண்ணிட்டாரு..?! "
" உங்களுக்கு பாட்டு சொல்லிக்குடுக்க
வாத்தியார் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டாரோ..?!! "
" ஹி., ஹி., ஹி.. இல்ல.. பக்கத்து வீட்டுக்காரங்க
எங்கப்பா மேல கேஸ் போட்டுட்டாய்ங்க..!! "
# மேய்ச்சது எருமை..!! அதுல என்ன பெருமை..?!

No comments:

Post a Comment