Tuesday, May 10, 2016


போன டிசம்பர்ல துபாய் போனப்ப
என் ப்ரெண்ட் ஜனா வீட்ல தங்கினதால
ஆற அமர 15 நாள் துபாய் சுத்தி பாத்தோம்....
அதனால இனிமே ப்ரெண்ட்ஸ் இருக்குற 
நாட்டுக்கு மட்டும் தான் டூர் போறதுனு
முடிவு பண்ணிட்டோம்..
( ஹி., ஹி.. நமக்கு தான் உலகம் பூரா
ப்ரெண்ட்ஸ் இருக்காங்கல்ல.. )
நெக்ஸ்ட் ப்ளான் தாய்லாந்து..
" ஏங்க அங்க யார்ங்க இருக்கா..?! "
" யாராச்சும் இருப்பாங்க.. இரு தேடி
பாக்கலாம்..! "
டக்னு என் ப்ரெண்ட் ராஜ்குமார் ஞாபகம்
வந்தது.. உடனே வாட்ஸ் அப்ல மெசேஜ்
தட்டினேன்..
" மச்சி.. நீ இப்ப பாரின்ல தானே இருக்கே..?! "
" ஆமா.. ஏன் கேக்கற..? "
" உன் வீட்டுக்கு வந்து., தங்கி., ஊர் சுத்தி
பாக்கலாம்னு தான்.. "
" எப்ப வர்ற..? "
" மொதல்ல நீ எந்த ஊர்ல இருக்கே சொல்லு..! "
" மணிலா..! "
" மணிலான்னா.. பிலிப்பைன்ஸ் தானே..?!! "
" ஆமா..! "
" ஆஹா.. நாங்க தாய்லாந்துக்கில்ல ப்ளான்
பண்ணி வெச்சி இருக்கோம்..! "
" ஓ.. இப்ப என்ன பண்ண போறே.? "
" நீதான் மச்சி மனசு வெக்கணும்..! "
" நானா..? என்ன சொல்ற..? "
" ஹி.,ஹி.,ஹி.. நீ தாய்லாந்துக்கு டிரான்ஸ்பர் 
வாங்கு மச்சி..!! "
" அடிங் கொய்யாலே..!!! "

No comments:

Post a Comment