Sunday, February 12, 2017

ஒருத்தன் எனக்கு 10,000 ரூபா தரணும்.. ரொம்ப நாளா டிமிக்கி குடுத்துட்டே இருந்தான்..
இன்னிக்கு எப்படியாச்சும் வசூல் பண்ணாம திரும்ப கூடாதுனு மனசுல கங்கனம் கட்டிட்டு அவன் வீட்டுக்கே போயிட்டேன்...
போனா... இப்ப என்னால குடுக்க முடியாது.. மெதுவா தான் குடுப்பேங்கறான்...
எனக்கு வந்துச்சே கோவம்...
நான் கத்த... அவன் கத்த...
நான் எகிற... அவன் எகிற...
பேச்சு பேச்சா இருக்கும் போதே அந்த படுபாவி பய டக்னு கீழே கெடந்த கட்டைய எடுத்துட்டான்...
பாத்துட்டு நான் மட்டும் சும்மா இருப்பேனா...
நானும் டக்னு என் பாக்கெட்ல இருந்து 500 ரூபாய எடுத்துட்டேன்...
இப்ப அவன் எனக்கு 10,500 ரூபா தரணும்..
ஹி., ஹி., ஹி...!!!

No comments:

Post a Comment