Friday, March 17, 2017

பங்சன்ல உக்காந்துட்டு இருந்தேன்... பக்கத்துல ஒரு தாத்தா வந்து உக்காந்தாரு...
அப்டியே என்கிட்ட பேச்சு குடுத்தாரு...
" தம்பி.. நீங்க..?! "
வாட்... என்னய தெரியாம கூட இந்த உலகத்துல ஆளுங்க இருக்காங்களா..?! கிரேஸி பீப்பிள்...
என்னை இன்ட்ரோ பண்ணிட்டேன்...
" நல்லது தம்பி... அதோ அந்த மேடையில ஒரு பொண்ணு நிக்குது பாருங்க... "
" எந்த பொண்ணு...?! "
" பச்சை கலர் சுடிதார் போட்டு இருக்குல்ல... "
அங்கே காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணு பச்சை கலர் சுடிதார்ல நின்னுட்டு இருந்தது...
" ஆமா தாத்தா... "
" அது என் பேத்திபா.. "
ஹைய்யோ.... எங்க போனாலும் நம்மள கல்யாணம் ஆகாத சின்ன பையன்னே நெனச்சிக்கறாங்களே...
" தாத்தா... எனக்கு..... "
" தம்பி அந்த பொண்ணுகிட்ட என் BP மாத்திரை இருக்குபா... கேட்டு வாங்கிட்டு வர்றியா... "
" ஹி., ஹி., BP மாத்திரை தானே... ஓ.கே., ஓ.கே....! "
உஸ்ஸப்பா.... கொஞ்ச நேரத்துல நம்ம BP-ய ஏத்தி விட்டுடறாங்ய்க.....!!
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment