Thursday, March 30, 2017

ரொம்ப நாள் முன்னால என்னை திட்டி ஒருத்தர் கமெண்ட் போட்டிருந்தாப்ல.....
நானும் வழக்கம் போல பொங்கி வந்த கோவத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருந்தேனா...
அத பாத்துட்டு என் ப்ரெண்ட் ரவி போன் பண்ணினான்....
" ஏன் மச்சி... அவன் கேவலமா திட்றான்... உனக்கு ரோஷமே வரலியா...? "
" யாரப் பாத்து, யாரப் பாத்து... இப்டி கேட்டே..? நானெல்லாம் மானத்துல அப்டியே கஸ்தூரிமான் மாதிரி.. "
" அடேய் வெண்ணை.. அது கவரிமான்ரா.. "
" ஹி., ஹி., ஹி.. தெரியும் மச்சி... அப்புறம் கவரிமான் பேரை நான் கெடுத்துட்டேனு எவனாச்சும் கேஸ் போட்டுட்டான்னா.. அதான் சேப்பா... "
# ஆமா இவன் எதுக்கு இப்ப துப்பிட்டு போறான்..?!! கன்பியூசிங்...!!

No comments:

Post a Comment