Sunday, September 3, 2017

காலங்காத்தால 8 மணிக்கு சுரேஷ் போன் பண்ணியிருந்தான்...
"வெங்கி... நம்ம கூட படிச்சானே சரவணன்.. அவன் நம்பர் இருக்கா..?"
"இருக்கே... எதுக்கு..?"
"இப்ப சேலத்துல ஒரு கல்யாணத்துல பாத்தேன்.. என்னை பாத்தும் கண்டுக்காம போயிட்டான்... அடையாளம் தெரியல போல இருக்கு..!!"
"கண்டுக்காம போயிட்டானா...? இரு லெப்ட் ரைட் வாங்கிட்டு வரேன்.."
"வேணாம் விடு... நான் கெளம்பிட்டேன்.. வொர்க் இருக்கு..."
"இல்ல... நீ மண்டபத்து வாசல்லயே நில்லு அவனை வந்து உன்னை மீட் பண்ண சொல்றேன்"னு சொல்லிட்டு சரவணனுக்கு போனை போட்டேன்...
"ஹலோ வெங்கி.. சொல்லுடா.."
"கல்யாணத்துல தானே இருக்கே..?"
"ஆமா.. எப்டி தெரியும்..?"
"சுரேசை பாத்தும் பாக்காம போயிட்டியாமாம்..!!"
"ஐய்யயோ... கவனிக்கலியே.."
"சரி இப்ப அவன் மண்டபத்து வாசல்ல தான் நிக்கறான், போயி பாரு..!! "
"பந்தில உக்காந்து இருக்கேன்.. போராடி இடம் புடிச்சேன் சாப்பிட்டு போறேனே.."
"டேய் ப்ரெண்ஷிப் முன்னால சாப்பாடாடா முக்கியம்.. மொதல்ல எந்திரிச்சு போயி அவனை பார்ரா வெண்ணை.."
சரின்னு போனை வெச்சிட்டான்..
8.20.... சுரேஷ்கிட்ட இருந்து போன்..
"என்ன வெங்கி.. அவன் வர்றானா இல்லியா?"
"இன்னும் அந்த நாய் வரலியா? இரு கேக்கறேன்.."
மறுபடியும் சரவணனுக்கு போன்...
"ஏன்டா எரும அவ்ளோ சொல்லியும் திங்க உக்காந்துட்டியா..?"
"டேய் கடுப்ப கெளப்பாதே.. 20 நிமிஷமா மண்டப வாசல்ல தான் நிக்கறேன்.. சுரேஷை காணோம்.."
"சுரேஷை காணோமா..?! ஆமா.. நீ எந்த மண்டபத்துல இருக்கே..?"
"ம்ம்ம்.. KNS மண்டபம்.. பெங்களூர்"
என்னாது... பெங்களூரா..?!! அவ்வ்வ்வ்வ்..

No comments:

Post a Comment