Saturday, September 2, 2017

இப்ப திருப்பூர்ல ஒரு கல்யாணம்... கார்ல போயிட்டு இருக்கேன்...
மாப்பிள்ளையும் டாக்டர், பொண்ணும் டாக்டர்...
ஆக்சுவலி இந்த கல்யாணம் பிக்ஸ் ஆக காரணமே நானும் என் சகலையும் தான்...
பொண்ணு வீட்டு சைடுல என் சகலை.. மாப்பிள்ளை சைடுல நானு... 6 மாசம் விடாம ரெண்டு பக்கமும் பேசி ஃபிக்ஸ் பண்ணினோம்...
கனெக்டிங் பீப்பிள்...!! ஹி., ஹி., ஹி...!!
ஒருநாள் என் சகலை என்கிட்ட கேட்டாரு...
" இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோமே.. கல்யாணத்துல நம்மள கவனிப்பாங்களா..?! "
" கவலைப்படாதீங்க சகலை நமக்கு கல்யாணத்துல கட்அவுட் வெப்பாங்க... "
இப்ப எனக்கு முன்னாடி என் சகலை மண்டபம் போயிட்டு போன்ல கூப்பிட்டாரு....
" சகலை.. நமக்கு கட்அவுட் எதுவும் வெக்கல.. "
" என்னாது கட்அவுட் வெக்கலையா..?! "
" ஆமா சகலை... பா.சிதம்பரம் வர்றாராம்.. அவருக்கு வெச்சியிருக்காங்க.. "
( பா.சிதம்பரமா..?! அவருக்கு எதுக்கு..? ஒருவேள நம்பள விட... சே.. அவர் மினிஸ்டர்ல... )
எனக்கு வந்துச்சே கோவம்... காரை அப்டியே திருப்பலாம்னு நெனச்சேன்...
" சகலை... கெளம்பி வாங்க... இன்னும் மண்டபத்துல என்ன பண்றீங்க..?! "
" இங்க பஃப்பேல ஏகப்பட்ட வெரைட்டி சகலை.. "
அரை மைக்ரோ செகன்ட் யோசிச்சேன்..
" சரி விடுங்க பெரிய மனசு பண்ணி கல்யாண வூட்டுக்காரங்கள மன்னிச்சிட்டலாம்.... "
ஐய்ய்ம் கம்மிங்ங்... ஹி., ஹி., ஹி...!!!

No comments:

Post a Comment