Sunday, September 10, 2017

விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு என் ப்ரெண்ட் வித்யா வீட்டுக்கு போயிருந்தேன்...
" வெங்கி கொழுகட்டை சாப்பிடறியா..?! "
( டக்னு வேண்டாம்னு சொல்லலாம்னு நெனச்சேன்.. அப்புறம் விநாயகர் கோச்சிட்டார்னா...? )
" ம்ம்... கொண்டு வா.. "
உள்ளே போயி வித்யா ஓரு கிண்ணத்துல எடுத்துட்டு வந்தாப்ல..
" ஏய்... என்னா இது..?! "
" கொழுகட்டை பொங்கல்... "
" அப்டினா..?! "
" ஹி., ஹி., தண்ணி கொஞ்சூண்டு அதிகமா போச்சா.. கொழ கொழனு வந்திருச்சு.. அதான் கொழுகட்டை பொங்கல்.. "
" நல்ல வேளை தாயி.. இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தாம போனே.. அப்புறம் நான் கொழுக்கட்டை கஞ்சி தான் குடிச்சிருக்கணும்.. "
" அதுவும் உள்ள இருக்கே... ஒரு டம்ளர் எடுத்துட்டு வரவா..?! "
" என்னாது...?!!! மீ எஸ்கேப்...!! "

No comments:

Post a Comment