Tuesday, September 5, 2017

நானும் என் மச்சானும் சேலம்ல இருந்து ரிடர்ன்.. மச்சான் கேட்டாரு...
" இப்டியே நியூ பஸ்டேண்ட் வழியா போயிடலாமா..?! "
" நோ.. நோ... அது சுத்து.. பால் மார்கெட் வழியா போங்க.. "
" அதுல... டிராபிக் ஜாஸ்தி இருக்குமே... "
" இந்த டைம்க்கு அவ்வளவா டிராபிக் இருக்காது... என்னைய நம்பி போங்க மச்சான்.. "
பால் மார்கெட் வழில திரும்பி போகும் போது அங்க ஒருத்தர் என்னைய பாத்து கை ஆட்டினாரு...
யார்ரா அதுனு உத்து பாத்தேன்... தெரியல... சரினு நானும் பதிலுக்கு கை ஆட்டிட்டேன்...
" யார் மச்சான் அது..?! தெரிஞ்சவரா..? வண்டிய நிறுத்தவா..?! "
" நோ.. நோ.. யாரோ என் பேஸ்புக் ஃபேனா இருப்பாங்க..!! இதெல்லாம் அடிக்கடி நடக்கறது தான்... "
அப்டியானு ஆச்சரியமா கேட்டுட்டு அவரு காரை ஓட்டிட்டு இருந்தாரு...
நான் பேஸ்புக் பாத்துட்டு இருந்தேன்...
ரோடு ப்ரீயா இருந்தது... அதான் சொன்னோம்ல....
எப்பவும் வெங்கிய நம்பினோர் கைவிடப்படார்...
ஒரு 7 கிமீ போயிருப்போம்... காரு டக்னு நின்னுடுச்சு..
வண்டி ஏன் நின்னுடுச்சுனு நான் மச்சானை பாத்தா.... அவரு என்னைய கொலவெறில பாத்துட்டு இருந்தாரு...
ஏன் இப்டி மொறைக்கராருனு திரும்பி ரோட்டை பாத்தா....
ரோடு ப்ளாக்டு..!!
ஆஹா... இதுக்கு தான் அவன் கைய ஆட்டினானா..?! அவ்வ்வ்வ்..!!!

No comments:

Post a Comment