Monday, October 23, 2017

காலைல ராகவ் வந்தான்....
" மச்சி என் ஆபீஸ்ல கூட வொர்க் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்லலாம்னு இருக்கேன்... எதாவது ஐடியா குடேன்... "
" ஐடியா தானே... குடுத்திட்டா போச்சு... "
( ஹி., ஹி., ஹி... ஐடியா குடுக்கறத நாங்க ஒரு பொதுசேவையா செஞ்சிட்டு இருக்கோம்ல...! )
" சரி.... ஐடியா குடு.. "
" கவிதை எழுதி குடு மச்சி.. அதான் பெஸ்ட்டு.. "
" ஐய்யோ.. எனக்கு கவிதை எழுத வராதே..!! "
( இதுக்கு ஏன் இப்டி பதர்றான்...? நானெல்லாம் என்னிக்காச்சும் இப்டி ஃபீல் பண்ணியிருப்பேனா..?! )
" சரி டோன்ட் வொர்ரி.. நானே எழுதி தர்றேன்.. "
சொல்லிட்டு கவிஞர் வெங்கூவை தட்டி எழுப்பினேன்...
கவிதை அருவி மாதிரி கொட்டிச்சு... டக்னு அத பேப்பர்ல புடிச்சிட்டேன்...
" கண்ணே...
நீயே என் ஆதார் கார்ட்,
வாங்கிக்கலாமா
நமக்கொரு ரேசன் கார்ட்..!! "
வாங்கிட்டு போயி 6 மணி நேரமாச்சு.... இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட இல்ல...
ஒருவேள லவ் ஓகே ஆகி... சினிமா, பார்க்னு போயிட்டானோ..?!

No comments:

Post a Comment