Wednesday, December 20, 2017

போன வாரம் என் ப்ரெண்ட் தினேஷை பாக்க ஊருக்கு போயிருந்தேன்... ரெண்டு நாளா அவன் ரூம்ல தான் தங்கினேன்...
ரெண்டாவது நாள் தினேஷ் குளிக்க போயிருந்தான்.. அப்ப அவன் போன் ரிங் ஆச்சு... நான் தான் எடுத்தேன்...
" ஹலோ... தினேஷ் இருக்காங்களா..?! "
( இந்த பன்னாடைய யாரு இவ்ளோ மரியாதையா கூப்பிடறது..?!! )
" நீ யாரும்மா..?! "
" நான் அவங்க ஆபீஸ்ல வொர்க் பண்றேன்... கிரிஜா.. "
( ஓ... கிரிஜா... சரி சரி.. )
" நீங்க தானே அவனுக்கு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு பாடி அனுப்பினது..?! "
" ஆமா... அதெப்படி உங்களுக்கு தெரியும்..?! "
" நாங்க தான் டெய்லி அத கேக்கறோமே..!! "
" ஓ... டெய்லி நைட் என் பாட்டு கேட்டுட்டே தான் தூங்கறேனு சொன்னாரு.. அது நிஜம் தானா..? "
" அப்டியா சொன்னான்..?! "
" ம்ம்ம்ம்... "
" ஆனா அந்த பன்னாடை.. நீ பாடினதை அலாரம் ரிங்டோனால்ல வெச்சி இருக்கு... டெய்லி காலைல அலாரம் அடிச்சதும் அலறி அடிச்சிட்டுல எந்திரிக்கறான்...!! "
" என்னாது... அலாரம் ரிங்டோனா..?!!
கிர்ர்ர்ர்... "
அந்த புள்ள ஒண்ணும் பேசாம கால் கட் பண்ணிச்சு... என்னவா இருக்கும்..?!!
#தும் தத்த்தா...!!! ஹி., ஹி., ஹி...

No comments:

Post a Comment