Thursday, December 21, 2017

நேத்து நைட் ஆனந்தை பாக்க போனேன்... தெரு என்டர் ஆகும் போதே.. அங்க நிக்கறான்...
அங்கயே ஓரமா நின்னு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
வீடு பக்கத்துல தான் இருக்கு.. ஏன் அங்க கூப்பிடாம இங்க நிக்க வெச்சி பேசிட்டு இருக்கான்..?! கழட்டி விட பாக்கறானோ..?!!
" வாடா ஆனந்த்... உன் வீட்டுக்கு போயி பேசலாம்.. "
" அது... வித்யா ஊருக்கு போயிருக்காடா.. "
" அதனால என்ன...?! "
" டின்னர்க்கு நாலு சப்பாத்தி தான் சுட்டு வெச்சிட்டு போயிருக்கா.. "
" அட லூசுப்பயலே.. இதுக்கா இப்டி யோசிக்கிறே.. எனக்கு நட்பு தான்டா முக்கியமனு " வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டேன்...
அப்புறம் என்ன... நட்புக்காக வெறும் நாலே நாலு சப்பாத்திய நான் அட்ஜஸட் பண்ணிக்கிட்டேன்..
ஆனா நான் சாப்பிடும் போது அவனுக்கும் அரை சப்பாத்திய குடுத்தேன்..
வேணாம்னு சொல்லிட்டான்.. பசிக்கலை போலிருக்கு..
நல்லவேள... நான் போகலைன்னா நாலு சப்பாத்தி வேஸ்ட்டால்ல போயிருக்கும்... ஹி., ஹி., ஹி...
டிஸ்கி: என்னை தப்பா நெனக்காதீங்க... அப்டியெல்லாம் என் ப்ரெண்ட்டை பட்டினியா தூங்க விட்டுடுவேனா...
ஹோட்டல்க்கு வற்புறுத்தி கூட்டிட்டு போயி... அவன் ரெண்டு தோசை.. நான் நாலு தோசை சாப்பிட்டோம்ல.. ( அவன் காசுல... நான் காசு குடுக்கறேனு சொன்னா.. கோவப்படுவான்.. ) 

No comments:

Post a Comment