Friday, August 18, 2017


நேத்து என் ப்ரெண்ட் Janarthanan Kasiviswanathan வீட்டுக்கு போயிருந்தேன்... அப்ப அவனோட பெரிய அத்தை...
" வெங்கிட்டு போன்ல என்ன படம்டா வெச்சி இருக்கே..? "
" ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்.. "
" சரி என் போன்ல ஏத்தி குடு.. "
ஷேரிட்ல ஷேர் பண்ணிட்டு மொபைல குடுத்தேன்.. அத பாத்துட்டு...
" என்னடா ஒரு படம் தான் ஏத்தியிருக்கே... இன்னொன்னு எங்க..? "
" ஒண்ணு தான் அத்தை..!! "
" டேய்.. ஜெமினிகணேசன் ஒரு படம்... சுருளிராஜன் ஒரு படம்னு ரெண்டு சொன்னியேடா.. "
" ஐய்யோ அத்தை... அது ஒரே படம் தான்.. "
" ஒரு படத்துக்கு ஏன்டா ரெண்டு பேரு வெக்கறாங்க..?! "
நான் ஜனா பக்கம் திரும்பி...
" எப்டிடா முடியல..!! "
" திஸ் ஈஸ் ஓபனிங்... யூ சீ என்டிங்... "
" என்னடா சொல்ற..?! "
" ம்ம்ம்... படம் பாத்துட்டு எங்கடா ஜெமினி கணேசனையும் கணோம், சுருளி ராஜனையும் காணோம்னு கேக்க போறாங்களே.. அப்ப என்ன பண்ணுவே..?! "
" என்னாது...!!! மீ எஸ்கேப்..!! "

No comments:

Post a Comment