Thursday, December 21, 2017

நேத்து நைட் ஆனந்தை பாக்க போனேன்... தெரு என்டர் ஆகும் போதே.. அங்க நிக்கறான்...
அங்கயே ஓரமா நின்னு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
வீடு பக்கத்துல தான் இருக்கு.. ஏன் அங்க கூப்பிடாம இங்க நிக்க வெச்சி பேசிட்டு இருக்கான்..?! கழட்டி விட பாக்கறானோ..?!!
" வாடா ஆனந்த்... உன் வீட்டுக்கு போயி பேசலாம்.. "
" அது... வித்யா ஊருக்கு போயிருக்காடா.. "
" அதனால என்ன...?! "
" டின்னர்க்கு நாலு சப்பாத்தி தான் சுட்டு வெச்சிட்டு போயிருக்கா.. "
" அட லூசுப்பயலே.. இதுக்கா இப்டி யோசிக்கிறே.. எனக்கு நட்பு தான்டா முக்கியமனு " வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டேன்...
அப்புறம் என்ன... நட்புக்காக வெறும் நாலே நாலு சப்பாத்திய நான் அட்ஜஸட் பண்ணிக்கிட்டேன்..
ஆனா நான் சாப்பிடும் போது அவனுக்கும் அரை சப்பாத்திய குடுத்தேன்..
வேணாம்னு சொல்லிட்டான்.. பசிக்கலை போலிருக்கு..
நல்லவேள... நான் போகலைன்னா நாலு சப்பாத்தி வேஸ்ட்டால்ல போயிருக்கும்... ஹி., ஹி., ஹி...
டிஸ்கி: என்னை தப்பா நெனக்காதீங்க... அப்டியெல்லாம் என் ப்ரெண்ட்டை பட்டினியா தூங்க விட்டுடுவேனா...
ஹோட்டல்க்கு வற்புறுத்தி கூட்டிட்டு போயி... அவன் ரெண்டு தோசை.. நான் நாலு தோசை சாப்பிட்டோம்ல.. ( அவன் காசுல... நான் காசு குடுக்கறேனு சொன்னா.. கோவப்படுவான்.. ) 

Wednesday, December 20, 2017

போன வாரம் என் ப்ரெண்ட் தினேஷை பாக்க ஊருக்கு போயிருந்தேன்... ரெண்டு நாளா அவன் ரூம்ல தான் தங்கினேன்...
ரெண்டாவது நாள் தினேஷ் குளிக்க போயிருந்தான்.. அப்ப அவன் போன் ரிங் ஆச்சு... நான் தான் எடுத்தேன்...
" ஹலோ... தினேஷ் இருக்காங்களா..?! "
( இந்த பன்னாடைய யாரு இவ்ளோ மரியாதையா கூப்பிடறது..?!! )
" நீ யாரும்மா..?! "
" நான் அவங்க ஆபீஸ்ல வொர்க் பண்றேன்... கிரிஜா.. "
( ஓ... கிரிஜா... சரி சரி.. )
" நீங்க தானே அவனுக்கு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு பாடி அனுப்பினது..?! "
" ஆமா... அதெப்படி உங்களுக்கு தெரியும்..?! "
" நாங்க தான் டெய்லி அத கேக்கறோமே..!! "
" ஓ... டெய்லி நைட் என் பாட்டு கேட்டுட்டே தான் தூங்கறேனு சொன்னாரு.. அது நிஜம் தானா..? "
" அப்டியா சொன்னான்..?! "
" ம்ம்ம்ம்... "
" ஆனா அந்த பன்னாடை.. நீ பாடினதை அலாரம் ரிங்டோனால்ல வெச்சி இருக்கு... டெய்லி காலைல அலாரம் அடிச்சதும் அலறி அடிச்சிட்டுல எந்திரிக்கறான்...!! "
" என்னாது... அலாரம் ரிங்டோனா..?!!
கிர்ர்ர்ர்... "
அந்த புள்ள ஒண்ணும் பேசாம கால் கட் பண்ணிச்சு... என்னவா இருக்கும்..?!!
#தும் தத்த்தா...!!! ஹி., ஹி., ஹி...

Friday, December 8, 2017

" ஆயகலைகள் அறுபத்தி நாலாம்..! "
" இருந்துட்டு போகட்டும்..! "
" உனக்கு எத்தனை கலைகள் தெரியும் வெங்கி..?! "
" என்ன ஒரு பத்து பதினஞ்சு தெரியும்.. "
" பதினஞ்சா..?! எங்கே லிஸ்ட் போடு பாக்கலாம்.. "
" ம்ம்.. கலைச்செல்வி, கலைப்ரியா., கலைவாணி.... "
கிர்ர்ர்ர்...!!!
விமல் போன் பண்ணியிருந்தான்...
" வெங்கி... சேலம்ல FM ஆரம்பிக்க போறாங்களாம்.. "
" சரி.. "
" ரேடியோ ஜாக்கி இன்டர்வியூ நடக்குதாம்.. கேள்விபட்டதும் உன் ஞாபகம் தான் வந்தது.. "
( பார்ரா...!!! )
" அதுக்கு..?! "
" உன்கிட்ட தெறமை இருக்கு... நீ அப்ளை பண்ணு.. "
" ஹி., ஹி., ஹி.. தேங்க்ஸ் மச்சி... இருந்தாலும்... "
" என்ன யோசிக்கிறே..?! "
" நாம பிஸினஸ்ல இருக்கோம்.. நமக்கு இதெல்லாம் செட் ஆகுமானு... "
" அதெல்லாம் ஆகும்... உன் தெறமைய இப்டி நாலு செவத்துக்குள்ள வெச்சி வேஸ்ட் பண்ண போறியா..? "
( நம்மகிட்ட ஏகப்பட்ட தெறமை இருக்கே.. அதுல எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சி இருக்கும்..?!! )
" மச்சி.. அது என்ன தெறமைனு நான் தெரிஞ்சிக்கலாமா..?! "
" ம்ம்ம்... மூச்சு விடாம பேசியே எங்கள எல்லாம் கொல்றேல்ல.. அதான்.. "
" கிர்ர்ர்ர்... இரு... உன்னை நேர்ல வந்து கொல்றேன்.. ராஸ்கல்... "