Sunday, August 18, 2013

என் Wife என்கிட்ட....

" கல்யாணத்துக்கு போகணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க.. "

" கல்யாணமா..? யார்க்கு..? "

" சுமதியோட சித்தப்பா பையனுக்கு.."

" மாப்ள எனக்கு பழக்கமில்ல.. அதனால நான் வரல.. "

" எத்தனையோ கல்யாணத்துக்கு கார்ல போயிருக்கோம். 

நம்ம டிரைவர் எப்பவாச்சும் இப்படி சொல்லியிருப்பாரா..? "

" ஹே.. என்ன வெளடுறயா..? நான் வரமாட்டேன் போ.. "

" ரொம்ப பிகு பண்ணாதீங்க.. ப்ளீஸ் வாங்க... "

" நானெல்லாம் மானஸ்தன்.. அப்படியே கவரிமான் மாதிரி... 

ஒரு முடி... "

" நீங்க கொடுத்து வைச்சது அவ்ளோதான்.. நான் என்ன பண்றது.. "

" வாட் டு யு மீன்...? "

" டின்னர்க்கு ஏகப்பட்ட வெரைட்டியாம்.. செம கிராண்டா 

இருக்கும்னு சுமதி சொன்னா.. "

" ஹி.,ஹி.. கல்யாணம் எந்த மண்டபத்துல...? "

No comments:

Post a Comment