பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..
என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..
" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "
" என்னங்க...? "
" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "
" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "
" அதுக்கு..??!! "
" போஸ்டிங் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "
" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "
டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.
ஹே யாருகிட்ட... ஹி., ஹி., ஹி...!!
No comments:
Post a Comment