Monday, September 28, 2015


டிஸ்கி : இந்த புரட்டாசி மாசம்., விரதம் எல்லாம்
எங்களுக்கு இல்ல..
சேலம்ல ஒரு மெஸ்ல... மட்டன், சிக்கன்
எல்லாம் சூப்பரா இருக்குனு என் சகலை 
சொன்னாரு..
அங்கே சாப்பிட போகணும்னா.. காலைல 11-க்குள்ள
போன் பண்ணி சொல்லிடணும்..
சரினு இன்னிக்கு ப்ளான் பண்ணிட்டோம்..
என் சகலை போன் பண்ணி சொல்லிட்டாரு...
சரியா 1 மணிக்கு மெஸ்ல இருந்தோம்..
அங்கே ஒரு பொண்ணு இருந்தது..
காலேஜ் படிக்கும்னு நெனக்கிறேன்...
" சிக்கன் ரெடி ஆகிட்டு இருக்கு ஒரு 10 நிமிஷம்
வெயிட் பண்ணுங்க"-னு சொல்லிட்டு போச்சு...
கொஞ்ச நேரத்துல இன்னும் 10 பேர் வந்துட்டாங்க..
சாப்பாடு, மட்டன், சிக்கன் எல்லாம் நல்லா இருந்தது..
பில் குடுத்துட்டு வரும்போது.. விசிட்டிங் கார்ட்
குடுத்தாங்க... நான் ஒண்ணு வாங்கிட்டேன்..
அதுல 4 மொபைல் நம்பர் இருந்தது..
உடனே நான் என் சகலைகிட்ட கேட்டேன்..
" சகலை.. உங்ககிட்ட இந்த எல்லா நம்பரும் இருக்கா..?! "
" இல்ல... ஒரு நம்பர் தான் இருக்கு.. "
" அப்ப மத்த 3 நம்பரையும் நோட் பண்ணுங்க... இந்தாங்க.. "
" வேணாம் சகலை... "
" ஏன்...?!! "
" இந்த நம்பர்ல பண்ணினா தான் அந்த பொண்ணு
எடுத்து பேசுது...! "
( நான் அப்படியே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்...
அடப்பாவி மனுஷா...!! )
உடனே நான் என் சகலைகிட்ட...
" சகலை.... இந்த நாலு நம்பர்ல எது அந்த நம்பரு..?!!
ஹி., ஹி., ஹி.. "
டிஸ்கி : தப்பா நினைக்க கூடாது.. அந்த நம்பரை
விட்டுட்டு மத்த மூனு நம்பர்க்கு போன் பண்ணுவோமாக்கும்...!!!

No comments:

Post a Comment