Tuesday, May 17, 2016

என் தங்கச்சி ஓட்டு போட போகாம தூங்கிட்டு இருந்தது...
" ஏய்.. எந்திரி... ஓட்டு போட போ.. "
" நீ மொதல்ல போயி கூட்டம் எப்டி இருக்குனு பாத்துட்டு 
போன் பண்ணு.. நான் வர்றேன்... "
பூத்துக்கு போனா.. அஞ்சு பேர் தான் லைன்ல நின்னுட்டு 
இருந்தாங்க..
உடனே போன் அடிச்சேன்...
" இங்க யாருமே இல்ல.. சீக்கிரம் கெளம்பி வா.. "
அரை மணி நேரமாச்சு.. இன்னும் ஆள காணோம்..
மறுபடியும் போனை போட்டேன்..
" ஏய்.. இன்னுமா நீ கெளம்பல..?! "
" நீதான் பூத்ல யாருமே இல்லனு சொன்னியே.. 
ஆபீசர்ஸ் வரட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... "
# கிர்ர்ர்ர்...!!

No comments:

Post a Comment