Saturday, July 9, 2016


3 வருஷம் முன்னால ப்ரெண்ட்ஸ் 15 பேரு சேர்ந்து கோவா டூர் போயிருந்தோம்...
ஒரு நாள் நைட் ஜாலியா பீச்ல நடந்து வந்துட்டு இருந்தோம்...
அப்ப மகேஷ் ஒரு விஷயம் என்கிட்ட சொன்னான்.... நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்..
" வேணாம் மகேஷ்... இது வெளையாட்டு இல்ல... உன் கூட வந்திருக்குற எங்க 14 பேரையும் இது பாதிக்கும்னு " கெஞ்சி கெஞ்சி சொல்லிப் பாத்துட்டேன்...
அப்பவும் அந்த பய அரை மனசா தான் சரினு தலையாட்டினான்...
எனக்கு அவன் மேல டவுட்டாவே இருந்துச்சு..
ஆனந்தை கூப்பிட்டு... மகேஷை தனியா விட்டுடாதே.. அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்னு சொல்லி வெச்சேன்...
அதுக்கப்புறம் மகேஷ் காலைல இருந்து எங்க கூடவே இருந்தான்...
ஆனா... நைட் 7 மணிக்கு மேல ஆள் எஸ்கேப்...
ரூம்ல நாங்க பதட்டமா உக்காந்துட்டு இருக்கோம்.. ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வந்தான்...
எது நடந்துடக்கூடாதுனு நான் பதறிட்டு இருந்தேனோ... அது இனிதே நடந்திருந்தது...
என்ன நடந்ததா...?!!
அந்த பக்கி அவன் Wife தீபா பேரை கையில பச்சை குத்திட்டு வந்திருந்தது...
ஐய்யோ... ஊருக்கு போனதும் தீபாகிட்ட இருந்து மொத போனு என் பொண்டாட்டிக்கில்ல வரும்...
# டேய்... வெட்டுங்கடா.. அவன் கைய...

No comments:

Post a Comment