Monday, July 11, 2016

அப்ப தினேஷ்க்கு கல்யாணம் ஆன புதுசு.. அவனைப் பாக்க அவன் ஆபீஸ் போயிருந்தேன்..
டீ பிரேக்.. டீ குடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம்..
அவன் மொபைல் ரிங் ஆச்சு.. லைன்ல அவன் Wife திவ்யா..
திவ்யா பேசினது எனக்கு லைட்டா கேட்டுச்சு...
"என்னம்மா..?"
"ஈவினிங் டின்னர்க்கு பரோட்டாவும், மட்டன் குழம்பும்.. ஓ.கேவா?"
"டின்னர்க்கு மட்டன் செட் ஆகாதே.."
"அப்ப சப்பாத்தி, சிக்கன் குருமா..?"
"சிக்கனா..? அது உடம்புக்கு சூடுமா.. அடிக்கடி சாப்பிடக் கூடாது.."
"அப்படின்னா வஞ்சிர மீன் ப்ரை, குழம்பு, சாப்பாடு.."
"மீனா..? அது போன வாரம் தானே சாப்பிட்டோம்.."
"அப்ப முருங்கைக்காய் சாம்பார், சைடு டிஷ்க்கு முட்டை பொரியல்.."
"நைட்ல முட்டை வேணாம்மா.. ஜீரணம் ஆகாது..."
"அப்ப நீங்களே சொல்லுங்க.."
"இட்லியும் இட்லிப்பொடியும்.."
"ஓ.கே மாம்ஸு.. சீக்கிரம் வந்துடுங்க.."
"ஓ.கே மா..!!"
இதைக் கேட்டுட்டு இருந்த நான்..
"ஏன் மச்சி.. உன் Wife டின்னர்க்கு விதவிதமா என்ன சமைக்கட்டும்னு கேக்கறாங்கல்ல.. நீ ஏன் வேணாம் வேணாம்னு சொல்ற..?"
"ம்க்கும்.. அவ போன் பண்ணினது என்ன சமைக்கட்டும்னு கேக்க இல்ல மச்சி.. என்ன சமைச்சி தரப்போறேன்னு கன்பார்ம் பண்ண.."
ஙே..!!!

No comments:

Post a Comment