Wednesday, August 24, 2016

காலைல ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிச்சு..
" அண்ணா.. எங்க மங்கு மாமாவ (Shajahan S) 3 நாளா காணோம்..?! "
( என்னாது... மங்கு மாமாவா..? இது தப்பாச்சே..!! )
" ஊருக்கு போயி இருப்பாம்மா.. "
" போன் பண்ணினாலும் எடுக்கலயே..? "
( ஓ.. போன்ல பேசற அளவு ஆகிப்போச்சா..!! சொல்லவேயில்ல... )
" அப்டியா. இதே தான் ஆனந்தியும் சொல்லிச்சு.. "
" ஆனந்தியா..? யார்ணா அது..?! "
" ஆனந்தின்னா சொன்னேன்..?!! ஹி, ஹி, ஹி. அது ஆனந்தி இல்லம்மா... ஆனந்த்.. "
" நீங்க என்கிட்ட எதையோ மறைக்கறீங்க.. "
" சே., சே.. மங்கு ரொம்ப நல்லவன்மா.. அவனை சந்தேகப்படாதே..."
" உங்க ப்ரெண்ட்டாச்சே... விட்டா கொடுப்பீங்க..?!! "
" ஹி, ஹி, ஹி.. சரி.,சரி.. இந்த ஆனந்தி.. சே.. ஆனந்த் மேட்டரை பத்தி மங்குகிட்ட எதுவும் கேக்காதே... "
" ம்ம்க்கும்.. இனிமே நான் ஏன் அவங்கிட்ட பேச போறேன்.. "
# நாதாரித்தனம் பண்ணினாலும்.. நாசூக்கா பண்ணனும்...!!!

No comments:

Post a Comment