Wednesday, August 31, 2016

அப்ப நான் காலேஜ் முடிச்சிட்டு சும்மா சுத்திட்டு இருந்தேன்..
( யார்ரா அது... நீ இப்பவும் அதே தானே பண்ணிட்டு இருக்கேனு சொல்றது... பிச்சு.. பிச்சு... )
ஒருநாள் ஆனந்த் எனக்கு போன் பண்ணினான்..
"மச்சி இன்னிக்கு ஈவினிங் எனக்கு பொண்ணு பாக்க போறாங்கடா.."
" வாழ்த்துக்கள் மச்சி.."
"நீயும் கூட வாயேன்.."
(எனக்கு ஆனந்தை நெனச்சா பெருமையா இருந்தது.. ஆனா.. நான் கூட போக... பொண்ணு என்னை பிடிச்சிருக்குனு சொல்லிட்டா...?! )
"இல்ல மச்சி.. அது சரி வராது... நான் வரல.."
"ஏன் மச்சி, நான் உன்னை தான் நம்பி இருக்கேன்.."
"என்னது என்னை நம்பி இருக்கியா.?"
"பொண்ணு பாக்க போகும் போது உன்னை விட சுமாரான ஒருத்தனை பக்கத்துல வெச்சிக்க.. அப்பதான் நீ பெட்டரா தெரிவன்னு எங்க சித்தப்பா சொன்னாரு.. ஹி., ஹி., ஹி.. அதான் மச்சி.."
# அடிங் கொய்யாலே...

No comments:

Post a Comment